0

வாயு

 

 சிறுகதை:             வாயு        

                    (அரு. நலவேந்தன்)

          “புகைப்பிடிப்பதனால் பல்வேறு நோய்களால் இன்றைய இளைய சமுதாயத்தினர் சிக்கித்தவிக்கின்றார்கள்…….! .உதாரணத்திற்கு நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் மற்றும் மிகக் கொடுமையானதாகக் கருதப்படும் மூளைப்புற்று நோயும் இதில் அடங்கும். புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்கள் விடும் புகையை மற்றவர்கள் சுவாசித்தாலும் அவர்களையும் இந்த நோய்கள் தாக்கவல்லது!”  என்று   ஒலிப்பெருக்கியின் வழி மலேசியச் சுகாதார மையத்திலிருந்து வந்த அதிகாரி இஞ்சே மாருல் ஹாசன் உரை ஆற்றிக்கொண்டிருந்தார்.

          ஆசிரியர்களும்  மாணவர்களும்  மிகவும் உண்ணிப்பாக அவரின்  சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு இருந்தனர். பொறுப்பாசிரியர் மாணவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மாணவர்களுக்கு ஒரு நாள் காவல் தெய்வங்களாகவும், மாணவர்கள் ஆதாமாகவும் சாத்தான்களாகவும் அரிதாரம் பூசியிருந்தனர்!

          மண்டபத்தின் இறுதி வரிசையில் அமர்ந்திருந்த   படிவ ஐந்து (சாத்தான்) மாணவர்களிடையே……. கைபேசி சினுங்கியது! காற்சட்டையினுள் பிரத்தியேகமாகத் தைக்கப்பட்ட  இடத்திலிருந்து….

         “அடடா…..! இந்த நேரத்திலே யாரு நம்மை கூப்பிடுறது…..?”   என்ற  மனக்கேள்விக்கு விடை காண இடக்கையைச் சுயமாகவே நோக்குகிறது கார்த்திக் (கருணாகரன்)  கண்கள். அவன் மனதில் ஆயிரம் கேள்விகளுடன் மன அலைகள் மெதுவாக கொந்தளித்துக்கொண்டு  இருந்தன கருணாகரன் இல்லை……இல்லை கார்த்திக்.

         கருணாகரன்  இது அவனது  பெற்றோர்கள்  வைத்த பெயர்.கார்த்திக்  அவனாகவே  உயிர்பித்துக் கொண்ட  பெயர். இவன் மட்டுமல்ல அந்த சாத்தான் (மாணவர்கள்) கூட்டமே ஒவ்வொரு முகமூடியை அணிந்து கொண்டுதான் வாழ்கிறார்கள் இந்த நவீன சாத்தான்கள்.

“புரோ…..யாரு புரோ இவன்,காலைலே வந்து டாச்சர் பண்றானுங்க…….”என்றான் தினேஸ் மிகவும் எரிச்சலுடன்.

“டேய்,அப்படில்லான் சொல்லாதீங்க டா….! மனுசன் கட்டையா இருந்தாலும் செமே மேட்டரைச் பத்தித்தான் பேசுறாக…..நல்ல கேட்டுக்குங்க டா…..!”என்றான் அவன்  பின் அமர்ந்திருந்த  நண்பர்களிடம் நமட்டுச் சிரிப்புடன் துவான் என்கிற சசி.

“தோட…..தலைவரே சொல்லிட்டாரு…….உடனே அந்த இடத்திலேருந்து எழுவது போல் பாவனை செய்தவாறு….. கூட்டத்தில் உள்ள நண்பர்களிடம்(சாத்தான்கள்)…….. டேய்……துவான்னே சொல்லிட்டார்……..இனிமே யாராவது இந்த ஸ்கூல்ல சிகரேட் பிடிச்சா மண்டைய உடச்சுருவேன்…..என்றான் அந்தக் கூட்டத்தின் மானசீக நகைச்சுவை மன்னன் விக்கி.

நண்பர்கள்  ஒரு சிரிப்பு(ஊலை) விட்டுப் போனது……

“இவனுங்களாளளே எப்படித்தான் சிரிக்க முடியுதோ…..? எவலோ திட்டினாலும் சிரிப்பு கூத்து,நையாண்டி,கிண்டல் தான்  செ…எரிச்சலா இருக்கு இவனுங்க முகத்த பாக்கிறதுக்கு ”என தெய்வங்கள்(ஆசிரியர்) கூட்டத்தில் சலசலத்துக் கொண்டு இருந்தது ஒரு தமிழ் தெய்வம்(ஆசிரியர்).

ஆனால்,பின் வரிசையில் இருந்த கார்த்திக் மட்டும் அந்த நகைச்சுவையைக் காதில் கேட்டாலும் முகத்தில் ஒரு சலனமும் இன்றி எதையோ தீவிரமாக சிந்திதவாறு இருந்தான்.கார்த்திக்கின் மிகவும் நெருங்கிய நண்பனானச்  சுனிலுக்கு மட்டும் தான் புரியும் அவனது ஒவ்வொரு அசைவும் என்ன அர்த்தத்தை விளக்குகின்றன என்று,இதனால் என்னவோ அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் மிகவும் குறைவு காரணம் அவனுடையே “மூடை” புரியாமல் கூராங் சக்காப்னா(வாய்க்கொடுத்தல்) அவ்வளவுதான்……. தேவை இல்லாமல் மூக்கின்வழியால் குருதியை சிந்தச் செய்து விடுவான்…(நீங்கள் பயப்படாதீர்கள்).

“டேய்  மச்சான்…..! என்னாட ஒரு மாதிரியா இருக்கே….சரி யில்லையே …….”காலைலே  சரக்கு(ஏவாள்) ஏதாவுது மூட்டே அவூட் ஆக்கிடுச்சா…..? என்றான் சுனில் .

இப்போதுலெல்லாம் ஆதாமை நேசிக்கும் ஏவாள்கள் காண்பது அறிதாய்விட்டது.நவீன ஏவாள்கள் (கார்த்திக்)சாத்தான்களைத்தான் விரும்புகிறார்கள். புற வாழ்க்கையைக் கண்டே சாத்தான்களிடம் “எல்லாத்தையும்”பறிக்கொடுக்கினர் ஏவாள்கள்,பிறகு தவிக்கிறது யாரவது முட்டாள்  ஆதாம் சிக்கும்மென்று.

“இல்லடா…. போன் வைபிரேட் பண்ணிக்கிட்டு இருக்கு,காலையில இருந்து போனே அட்டென்பண்ணலே…….அதான் கடுப்பா இருக்குடா…..மச்சி எதாவுது வழி சொல்லேன் ……..செராமாவே பொந்தேங் அடிச்சுட்டு  ஜாலியா எங்காவுது போய்ட்டு லேபாக் பண்ண போறேன் ……. எப்படி நீயும் வரியா…………”என்றான் கார்த்திக்.

“எனக்கு  ஓகே……ஆனா இந்த சித்தி ஹாஜார் (கட்டொழுங்கு ஆசிரியர்) தொல்ல தாங்க முடியிலே மச்சி……..காலை ஏன் லேட்ட வந்தே ,முடி ஏன்  நீட்ட வளர்த்துருக்கெ,ஏன் சிலுவாரே “போ கட்” வெட்டிக்கேன்னு”ஒரே கேள்வியாகேட்டு கொல பண்றாடா…..இவளான் எப்படித்தான் புருசன் காரன் வச்சுகிட்டு வாழ்றானோ…..பாவம்  பய புள்ளே……..என்றான் சுனில் கோபமும் சிரிப்பும் கலந்த பாவமுடன் மனதில் உள்ளதை கொட்டினான்.

கட்டொழுங்கு ஆசிரியை மண்டபத்தில் நுழைந்து…… இறுதி வரிசைக்கு அருகில் வந்தார்.

செலமாட் பாகி புவான்”என முகமலற(கிண்டலுடன்)  கூறினான் சுனில்.

“ஒய்…..சுனில் ,பெராப்பா காலி டா சகாப்புன் தா மாவ் டெங்ஙார்,காமு டா உமுர் தூஜோபெலாஸ்.,தாபி, தாக் மாஹு உபாஹ் டிரி செண்டீரி…….சாய புன் தாக்தாவுலா அப்பா…! நக் பெரி நாசிஹாட்?…….ஒஹ் செமுவ கேங் கெங் சினி டாஹ் கும்போல் கே……தாக் மாவ் சது மலேசியாக……..?டெங்கர் அப டிஅ சகப்……” ஜாகான் புவாட் பீசிங்……ஓய்…..விகி ஜக முலுட் கௌ…….”என்றார் மிகவும் ஆத்திரமாகவும் வெறுப்புடனும் புவான்.சிதி ஹாஜார்.இவர் எங்களுக்கு மலாய் மொழி ஆசிரியர்.வகுப்புக்கும் இவருக்கும் என்றைக்குமே சரி வராது.வகுப்புக்குப் போதிக்க வருகிறாரோ இல்லையோ வசைபாட மட்டும் இவரது காலடி தடம் வகுப்பை நாடும்.

“மச்சி இவளுக்கு என்னமோ தெரியலே ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்கா……..என்னிக்கி இவ மூஞ்சே கிழிக்கப் போறேன் தெரியலே…….”என்றான் கார்த்திக்கிடம் சுனில்.

“சரி விடுங்க புரோ……அவளுக்கு யார் இருக்கா பேசறதுக்கும்  திட்டுறதுக்கும்…….இதுக்கெல்லாம்ம் போய்……..பீல் பண்ணலாமா…….முன்னுக்கு   ஒருத்தேன் ஒரு மணிநேரமா சொற்பொலிவு ஆற்றிக்கிடு இருக்கான் அத கேளுங்க புரோ.”என அவர்களைத்  திசைத் திருப்பினான் தினேஸ்.

“இந்த நஞ்சுப் வாயுவை  வெளியாக்குபவர் எந்த வகையாலும் நாட்டிற்கும்  வீட்டிற்கும் நன்மை வரப்போவதில்லை…..இவர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்…..”என்றவர் சொல்லில் ஒருவகை வெறி எட்டிப்பார்த்தது.

“ஏன் மச்சா சிகரெட்னாலே இவ்லோ பிரச்சனை வருமா……?” என வினவினான்  சுனிலிடம் கார்த்திக்.

“இதலாம் Form 3 ல படிச்சது மச்சி”என பதிலளித்தான் சுனில்.

“ஓக்கே  ஓக்கே..”என சுதாரித்துக்கொண்டான், “டேய் மடையா கெலாஸ்கு  பக்கமே போனாதுலே….அப்புறம் எங்கேடா  மனசாட்சி  காரி உமிழ்ந்தது. அவனது முகத்தில்,பிரமை என எண்ணினாலும் முகத்தை தன் கைகளால் துடைத்துக்கொண்டான். 

“இதுக்கப்புறம் முடியாதுடா…..நான் பொந்தேங்  அடிச்சிட்டு லெபாக் பண்ண போறேன்………யாராவது வரிங்களாடா…..”(சும்மா கேக்கிறது தான்…..அங்க யாரும் வரமாட்டானுங்க நம்ம சுனில்ல  தவிற)என வாஞ்சையுடன் கேட்டான் கார்த்திக்.

“வாட கிளம்புவோம்”……..என சுனில் கூற,  ஒரு சில நிமிடங்களில் ஒருவர்  பின் ஒருவாராக இடத்தை  மற்றவர்களுக்கு  வாடகை விட்டுச் சென்றனர்.

கார்த்திக்கும் சுனிலும்  பள்ளியின் இறுதி கட்டிடத்தை  நோக்கி  விரைகிறார்கள்.

“செ…,பெசாமே அங்கே இருந்திருக்களாம்……இந்தெ நாயோட நம்மலாம் வந்துட்டோம்,இன்னும் கொஞ்ச நாள்ள எஸ்.பி.எம் பரிச்செ…….கண்டிப்பா கோல்லுதான்(தோல்வி), வீட்ல என்னாதுனா ஓயாமே திட்டிக்கிட்டு  இருக்கான் அவன்(அப்பா)…..செ வாழ்க்கையே கடுப்பா இருக்கு……பரவாயில்ல இதல்லாம் போக்குறதுக்குண்ணு ‘ கேள் பெரென்’ வச்சிக்கிட்டா  மைன்ட் ரிலக்ஸா இருக்கலாம்னூ பாத்தா அவ ……..அத விட டாச்சரா இருக்கா…..அவக்கூட போனியா இவக்கூட போனியா,இவன்கூட சேராதே அவன்கூடா போகாதேனு அட்வாய்ஸ் மேல அட்வாய்ஸ் குடுத்து கொல்லறா……ஆனா இவன் மட்டும் எது வந்தாலும் கூலா இருக்கான்,ஒன்னுக்கு மூனுவச்சி சுத்திகிட்டு  இருக்கான்…… எப்படி..?….”என  சுனிலின் மனசாட்சி குமுறிக்கொண்டு  இருந்தன கார்த்திகின் தான்தோன்றிக் குணத்தைக் கண்டு.

“செ….. பெரிய தப்பு பண்றோமோ,புகைப்பிடிப்பதினால்  மற்றவர்களை  நாம  என்ன கொலயா  செய்கிறோம,சிகரட் அடிக்கிறதெ ஒரு ஸ்டைல் தான்நினைச்சேன்……ஆனா இப்படி நடக்கும்னு நிறைய முறை கேள்விப்பட்டு இருக்கேன்…….பட் கண்டுக்கிறதி ல்ல…..அப்ப சிகரேட் அடிச்சாரு,அண்னே  சிகரேட் அடிச்சான் அதனாலே கத்துகிட்டேன்…..! செ அவகூட(ஏவாள்) சொன்னா காதுலயே கேட்டுக்கலே….செ பயம இருக்கெ…..பேசாம விட்டலாமா…….

“புகைப்பிடிப்பவர்கள் மட்டும் இந்நோய்களைக் கொண்டவர்கள் அல்ல,இப்புகையைச் சுவாசிப்பவர்களும் இந்த நோய்களைக் கொண்டுள்ளார்கள்”மீண்டும் மீண்டும் மணியோசையாய் அவனுக்குல்  ஒலித்துக்கொண்டு இருந்தது.                     

சில வினாடிகளில் பிறகு  “நோ ……நோ….இப்ப விட்டேன் அவள்ளவு தான்”……எனக்கு  லீகாட்தான்  முக்கியம்…..இவனுங்க சொல்றதுக்காக விட்டா…….அவளவுதான் சின்ன  பயலுகக்  கூடப்  பொம்பளனுச் சொல்லிப்புடுவான்.(சாத்தான் வேதம் ஓதுமா)

இருவரும்  இறுதிக் கட்டிடத்தினுள்ள  அறிவியல்  அறை பக்கத்தில் இருக்கின்றக் கழிவறைக்குத்  தங்களின் வருகையைத் தெரிவித்திக்  கொள்வது போல்,முகப்புக் கதவை முட்டிக்காலை மடக்கி முத்தம் கொடுத்தான்……பாவம் அழகாய் திறக்க வேண்டியது அலறிக்கொண்டு திறந்தது  வாயிற் கதவு.

(மாணவர்கள்)சாத்தான்கள்  கைவண்ணம்  படிந்த சுவரும் பல நாட்களாகத்  தண்ணீரைக் கண்டிராதத் தரையும் தேங்கி நிக்கும் கழிவுகளின்  வாடையும்  சட்டென்று  மூக்குக்கு விரலைப்  போட வேண்டும் இல்லை என்றால் அவ்வளவுதான்…..

“டேய் கொஞ்ச நேரம்  நீ இங்கயே வெய்ட் பண்ணு”……….என  கோரிக்கையைச்    சுனிலுக்கு விடுத்தவன்.  கழிவறையினுள்  உள்ள  இறுதிக் கூடத்திற்க்கு அவனது கால்கள் தேடிச் சென்றன.

“கே..கே…… அது வரைக்கும் நான்  ரெண்டு இளு இளுத்துக்கிறேன்”என ஆசையாய்க் கூறினான் சுனில் கார்த்திக்கிடம்,ஆனால்,அவன் அதை  காதில் போட்டு கொண்டவனாகத்  தெரியவில்லை.

கார்த்திக் தனது  கைபேசியை   உயிர்ப்பித்துக்கொண்டதை அதன் ஒலிக்காட்டித்தந்தது.

கழிவரையின் வாயில்  கதவு மீண்டும்  சுவரோடு ஐக்கியமாகுகிறது.

சுனில் சற்று குனிந்து இடது காலுறையினுள் கையை விட்டு  ஒரு புதிய சிகரட் பெட்டியை எடுத்தான்.

“செ…..மைன்ஸ் ரிலெக்ஸ் பண்ணலாம்னு  சிகரட் வாங்கினா இது மேல கண்ட படத்த போட்டு பயத்த உண்டாகிறானுங்க,அவனுக்குங்களுக்கு தான் நஷ்டம்…….சரி வந்த வேலயே பார்போம்……என சுனில்.

சிகரேட்டில் மேல் இருந்த  படத்தைச் சுண்டு விரல் நகத்தாலே கீரி கிழித்து வீசினான். வலக்கரத்தால்  பெட்டியைப் பிடித்து இடக்கரத்தால் சில முறை தட்டி பிரித்து  மூக்கின் அருகில் கொண்டு சென்று ஒரு முறை மூக்கால் வாசனையை  இழுத்தான்.அதில் ஒரு வெண்சுருட்டு எடுத்து தனது குவித்த உதடுகளில் செருக்கி  லைட்டரால் பற்ற வைத்து புகையை உள் இளுத்தான்……..

“வாவ்……என்ன ஒரு சுகம்…..இப்பத்தான் சூப்பரா இருக்கு….”ஒரு புதிய சுறுசுறுப்பு  தனது குருதீயோடு  பின்னல் போட்டது சுனிலுக்கு.

கழிவரையின் கதவுக்கு திடீர் உயீர்பெற்று  திறந்துக்கொண்டது.

சுனிலுக் ஒரு வித பயம் சாலை மஞ்சள் சமிக்ஞை விளக்கு போல் வந்து விட்டு போனது உள்ளே  வந்தது  தனது நண்பர் என்று அறிந்ததும்.

“டேய் ….அட செ… நீ யா….. சரி …உள்ளே வாடா ….” என நண்பன் துவான்(சசி) யைப் பார்த்துக்கூறினான் சுனில்.

“கார்த்திக் எங்கடா……?”என கேட்டான் துவான்(சசி).

“உள்ள சரக்குக்கு(ஏவாள்) கிட்ட பேசிக்கிட்டு இருக்கான்”.வந்தவன்  சிகரட்டை  சுனிலின் கைகளிருந்து  பங்கு போட்டுக்கொண்டவன்…..தனது  சட்டைபையிலிருந்த  ‘கோடாலி சாப் தைலத்தை’  சிகரெட் மேல் பன்னீரை தெளிப்பது போல் தெளித்து   ஒரு சில ஊதலில் அவன் சொர்கத்தை கண்டவன் போல் மெய்மறந்து நின்றதைக் கண்ட சுனிலும் ஆவாலாய்  சிகரட்டைப் பகிர்ந்து கொண்டான்.

இருவரும் கழிவறையின்  வாடை  மூக்கை அடைத்தாலும்  சிகரட்டின் புகையால் மாய நித்திரையில் கலந்து  பறந்து கொண்டு இருந்தனர்.

“ஏன் துவான்….புதுசு புதுசா எங்க கண்டு பிடிக்கிறே……”என்றான் சுனில்

“எல்லாம் அப்படித்தான்…..புரோ…” என்றான் துவான்.

“ஆனா……போன  தடவை காஜா கம் காச்சி அடிச்சதே ……மறக்கவே முடியாது….”என சுனில் மயக்கத்தோடு கூறினான்.

“மறந்தே போய்டேன் …..மூர்த்தி கால் போட்டான் …..இன்னைக்கு அவன்  இடத்துல சண்டை  இருக்கா  வரிங்களாடா……என கேட்டான் துவான்.

சொல்லி முடிப்பதற்குள் சுனில் வழிமறித்தான்.

“அதெல்லாம் ஓகே…யாரு கூட….?”

“ஜாபார்  கூட்டத்தோடுதான்”……என துவான் சொல்ல….

“அந்தப் பேய்களுக்குத் திமீர் ரொம்ப அதிகமாப் போச்சு! இன்றைக்கு இருக்கு…… ஒரு காட்டு காட்டிட வேண்டியதுதான்” எந்கிறான் சுனில். 

துவான் முகத்தில் ஒரே சிரிப்பு…!.

“அண்ணே…….. இப்ப நான்……..என்ன பண்ணனும்…….?”கார்த்திக்கு மெதுவாகக் கேட்டான்.

“நீ ஒன்னும் செய்ய வேண்டாம். பெரிய மாமாகிட்ட   எல்லா விவரத்தையும்  சொல்லிட்டேன். தம்பி……நீ ஒன்னும் கவலப் படாதடா. அது சாதாரணக் காய்ச்சல்தான்.

நீ வந்துட்டேன்னா……எல்லாம் முடிஞ்சிடும்! ” என  பரதன் சொல்கிறார்.

“என்ன முடிஞ்சிறோம்……?” சற்று நிலை தடுமாறிக் கேட்டான் கார்த்திக்.

“இல்ல…… நீ பாத்துட்டுப் போய்யிடலானு சொன்னேன்…” அததான்  தவறுதலா.  சொல்லிட்டேன்! ” என்றான் பரதன்.

“சரி……அண்ணே…..வந்துடுறேன். நீங்க ஒன்னும் கவலப் படாதீங்க” என  மனதில் ஒரு துயரம் வந்து தொற்றிக்கொண்டதைக்  கார்த்திக்கின்  குரல் காட்டியது. கைபேசியை  வைக்கிறான்..

கடவுளே……! அம்மாவுக்கு  ஒன்னும்  ஆயிடக் கூடாது….! .பிளீஸ்…… அவங்கள  என் கிட்ட இருந்து  பிரிச்சிடாதே என  மனதுக்குள்  கடவுளிடம் இறைஞ்சினான்.

ஏற்கனவே  அம்மாவுக்கு  நுரையீரல்  புற்றுநோய்யுனு சொல்லி பல லட்சம் செலவு பண்ணி  கீமோதெராப்பி  செஞ்சாங்க. ஆனா, இதுக்குப்  பிறகு மறுபடியும்காய்ச்சல் வந்தால் நிச்சயம் அது புற்றுநோய்தானு டாக்டர் சொன்னாரு!”

      “அய்யோ….!அப்பா சிகரட்  பிடிச்ச நாளே அம்மாவுக்கு  வந்துச்சு……! பிறகு என்னே சுற்றி இருக்கிறவங்களுக்கும் கேன்ஸர்  வராதுனு என்ன நிச்சயம்……….? என யோசித்தவன் நண்பர்களைக் கண்டதும்  எதுவுமே  நடை பெறாதது போல் முகத்தை  மாற்றிக்கொண்டான்.

“டேய்….மச்சான்.  லேட்டா  வந்தாலும் லேட்டஸ்டா  வந்துருக்கு ……புது டேஸ்ட்…..! .சூப்பரா இருக்குடா…..! ஒரு முறை  ஊதுறியா….” என்று  கூறினான் கார்த்திக்கிடம் சுனில் வாஞ்சையுடன்.

முகத்தில் ஒரு நமட்டுச் சிரிப்பு! இப்பொழுது அவன் ஆதாமாக அரிதாரம் பூசம்  நேரம் வந்தது.

அவனது கால்கள் மீண்டும் மண்டபத்தை நோக்கி விரைந்தன!

                              முற்றும்

0

குருதி

            குருதி

           (அரு.நலவேந்தன்)

       அவன் உரையாடலுக்குப் பிறகு  கிளர்ச்சி உடலில் பரவியது.என் பற்கள் கீழ்உதட்டைக்  கவ்விக்கொண்டன. பனிக்காற்று  ஈர உடலுடன் ஊடுருவிய சுகம் அவனது சொற்கள்.எத்தனை முறை முயற்சித்தும் கிடைக்காத அந்தத் தருணம் இன்றோடு நிறை வேறிவிடும்.அவன் சொன்ன  விதிகள் மனம் மறந்து தெளிவுற்றது. விரல்களால் கண்ணைப் பிசைந்து கொண்டு பக்கத்தில்  பார்வைச் சிதறவிட்டேன்.அவனது சரிரம் மறைந்து கொண்டும் கடிகாரம் சுறுசுறுப்புக் கொண்டும் இருந்தது.

       இன்னும் அரைமணி நேரத்தில் கால்களுக்கு ஓய்வு வந்துவிடும்.பெரும் மூச்சை இழுத்து விட்டேன்.இரவு இன்பமாக முடிய வேண்டும்.மிஷினிலிருந்து பிளாஸ்டிக் புட்டிகள் வருகை அதிகரிக்க  கைகளுக்கு வேலை அதிகமானது பேகட்டிங் டிப்பாட்மண்டும் நிறைந்தது.

        வெறுச்சோடிய கம்பனியின் வெளிப்புறம்,வெளீர் நீலச்சட்டை கூட்டம் ஆங்காகே தோன்றி பிரசங்கித்தது.சாலை பிரயாணிக்கும் இவர்களின் வர்ணங்கள் வெள்ளிடைமலை.

       அவனது வருகைக்காகச் சாலை மின் விளக்குத்தூணைத் துணையாகக் கொண்ட கால்கள் வலித்தன.காரணத்திற்காக(அகவையில் சிறியவன்) அவனிடம் பேசியதே இல்லை.

       நல்லெண்ணை பூசிய தலை  கணரகங்கள் செல்லும்  வேகத்துக்கு வரும் காற்றுக்கு  கலைந்து  சென்று விட்டிருந்தது. முகத்தில் உருண்டோடிய ஒரு சில முடிகளை இடக்கையால்  சுருட்டிக் காதுகளின் பின்பக்கமாய்ச் செருக்கிக் கொண்டேன். அந்தப்  புழுதிக் காற்றில் முகத்தில் படிந்த தூசுகளைக்  கைக்குட்டையால் தூய்மையாகினேன். அவளவும் போனதாக இல்லை.காலையிலிருந்து அது ஒன்றுமட்டும் தான் ன்சுத்தம். இப்போது  வியர்வை வாடைக்குப் பஞ்சமில்லாமல் உருவகித்திருந்தது.

       இன்று இவன் தான் எனக்கு கடவுள்  மனம் நமட்டுச்சிரிப்புடன்.அவன் என்னை நெருங்கி வரும்முன்னே நான் அருகில் சென்றேன்.

“அண்ணே….காசே கணக்கா  குடுத்திடனும்னே.அங்கே போய்  என்னே கேவலப் படுத்திபுடா தீங்கே….”அவன் சொன்னான்.

“மாப்பிள…நீ அதெப்பத்திக் கவலப் படாதேலெ”நான் சொன்னேன்.

ஒரே  ஊர்காரர்கள்.ஒரே சாதிக்காரர்கள். அதனால் என்னவோ நாங்கள்  பேசும் மொழியைக்கேட்டு நின்ற வங்காளதேசிகளுக்கு விளங்க வில்லை.இதுவும் நல்லதுக்குத்தான் என் கௌரவம் தப்பித்தது.இருவரும் ஹாஸ்டலைக் நோக்கி நடந்தோம் தெருப்புழுதியைத் காலணியால் தேய்த்துக்கொண்டே.

சூரியனும் ஓய்வுக்குத்  தயாராகிக்கொண்டு இருந்தான்.ஆங்காங்கே சிதறிக்கிடந்த வெண்முகில் தீயில் மெல்ல மெல்ல கருகிக்கொண்டு சாம்பலாயின.சாலை ஓரத்து ஆவாரம் பூக்களும் வெறுமென கண்களை மூடித் தூங்கின.சாலை மின் விளக்கின் ஒளியில் அவை தனி அழகைக் கொண்டிருந்தன.கைக்கடிகாரத்தைப் பார்த்து மனதில் வெம்பிவிட்டு,அவன் வந்ததும் மனம் சந்தோஷம் கண்டு இருவரும் டவுனுக்குப் போகிற கடைசிப்  பேருந்தின் பின் வாசலில் ஏறிக்கொண்டோம், நீண்ட காத்திருத்தலின்  பிறகு ….. 

நுழைந்ததும் அத்தர் வாடைக்குப் பஞ்சமில்லாமல் இருந்தது.எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் இருப்பதாகத் தெரியவில்லை எல்லாம் ஆசிய நாட்டு இளங்சிங்கங்கள் எங்களையும் சேர்த்துதான். இருவருக்கும் இடம் இருபதாக தென்பட வில்லை.என்றோ  தோய்தெடுக்கப்பட்ட அரக்கு நிற ஜீன்ஸ் பேண்ட்,முட்டிப்பகுதியில் சற்றுத் தேய்ந்து கிழிந்து டிரைவரை அடையாளப்படுத்தியது.ஒரு கறுப்புக் கோட்டு போன்ற உடையை அவன்  சாத்திருந்தான்.இடத்தைக்கேட்டு நமட்டுசிரிப்பு சிரித்து  டிக்கட்டை வலது கையால் தந்தான்.  போகட்டில் திணித்து விட்டு உள்ளே நகர்ந்து கைப்பிடியைப் பற்றிக்கொண்டேன் அவனும் தான்.பேருந்து நேராக நகரத்துக்குச் செல்கிறது.

“சார்….நாளைக்கு நம்ம ஆளுங்கள…….” மேனேஜர் முத்து.

“மிஸ்டர்.முத்து அதைப்பற்றி கவலை படாதே…..” முதலாளி ஜேம்ஸ் லெட்சுமணன்.

“தெங்கியு வெரி மச்…சர்….”மேனேஜர் முத்து.

“ஸோரி……,நீங்கே தேர்வு செய்த பாய்ஸெல்லம்  கூட் ரிப்போட் உள்ளவங்க தானே…..?” முதலாளி ஜேம்ஸ் லெட்சுமணன்.

“யேஸ்…சார்….”மேனேஜர் முத்து.

“ம்ம்ம்ம்ம்…..ஐ…சீயு டுமோரொ….”முதலாளி ஜெம்ஸ் லெட்சுமணன்.

ரிசீவரை வைத்து விட்டு,அன்றைய நாளேட்டைப் பார்க்கிறார்.இந்திய இளைஞர்களின் குற்றச்செயலுக்கு மேலும் அழகு சேர்ப்பதற்காக ஒரு செய்தி.படித்து முடித்தவுடன் மனதில் வெவ்வேறான பதில் கொண்ட கேள்வி கேட்கிறது மனசாட்சி.இதற்கெல்லம் தனது பெருமூச்சேய் பதிலாகிறது.பத்திரிக்கை மூடப்பட்டு மேசையில் வைக்கப்படுகிறது.

“சைய்…முட்டாளாட்டம் பஸ்சை ஓட்டுறான்…கொஞ்சம் நேரத்து தூக்கிவாறி போட்டுச்சு..”என்றேன் .

“எண்ணண்னே…இதுக்குப்போய் வையிரீங்க…” அவன் சொன்னான்.

அவனது பேச்சிலே தெரிந்தது அவனது அனுபவம்.பேசுவதற்கு வாய் வரவில்லை.நேராக அவனின் சட்டையைப் பிடித்து முகத்தில் அறை விட வேண்டும் என்று மனம்.என்னுடைய இடமாக இருந்தால் பரவாயில்லை.அவர்களின் நாடு பிழைத்துப் போகட்டும்.இடமும் வந்தது.வரும் வழியெல்லம் யாரும் இல்லாத இடமாக அவதாரம்.ஆனால்,இங்கு மட்டும் இப்படியொரு கூட்டம் கூடியிருந்தது இன்ப அதிர்ச்சி.சீன அழகு விளக்கு தெருவோர  அழங்காரம்.வெவ்வேறு முகங்கள் ஆங்காங்கே தெரிந்தன.நானும் அவனும்  பல வர்ண விளக்குகள் தொங்கவிடப்பட்ட கட்டிடத்தின் மாடிப்படிக்கட்டில் ஏற ஆரமித்தோம்.

       சென்ற தீபாவளிக்குதான் சுவருக்கு வெள்ளை பூசியிருக்க வேண்டும்.சுவரில் ஆங்காங்கே தீபாவளி வாழ்த்து அட்டைகள் தொங்க விடப்பட்டு வெழுத்து இருந்தன.ஏறியவுடனே முதல் மாடியில் வலதுப்புறம் ஒருசில பெண்கள் கைகளை அசைத்து  வரவேற்றனர் தங்களின் உடலை வாடைக்கு விடும் தாசியர்கள்.மனதில் ஒரு கிளர்ச்சி உருவாகி  உடலில் பரவி விளைவாய் புறங்கை முடிகளின்  நிமிர்தல்.இருவரும்  வெவ்வேறு வர்ணம் கொண்ட பெண்களை தேர்ந்தேடுத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தோம்.செந்நிறம் பூசிய கூந்தல், சிவந்த முகம்,சாயம் பூசிய உதடு  மனைவியை விட அழகானவளைக் கொண்டதற்கு மனம் மகிழ்ச்சியாக இருந்தது. அவளின் வாய் மொழி புரியவில்லை உடல் மொழியை தவிர, அறைக் கதவு அடைக்கப்பட்டது.

காலைப் பனிக் காற்று கரைந்து கதிரவனின் ஆதிக்கமாய்  வானம். வழிதாங்க முடியவில்லை.இதுவரை இப்படி அனுபவித்ததில்லை.மிகவும் அருவருப்பாக ஒருவரை ஒருவர் கண்ட நிமிடம்.இந்தக்கோலத்தில் என் மனைவி பார்த்தால் மாரடைப்பில் உயிரையே விட்டுவிடுவாள்.லட்டியால் அடித்த இடங்கள் வீக்கம் கண்டு இருந்தன.அரை நிர்வாணமாக இருப்பதற்கு  கூச்சம்.துணையாக அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தேன். இளரத்தங்களும் வயோதிகர்களும் இருந்தனர்.அவன் நான்கு மனிதர்களுக்குப் பிறகு இருந்தான்.

காவலதிகாரி ஒவ்வொருவரின் சுய விவரங்களைக் கட்டாயமாய்க் குறித்து கொண்டு இருந்தார்.நானும் சொன்னேன்.மற்றவர்களும் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தனர்.ஒரு சிலர் முரண்டுப் பிடித்து முகம் சிவந்த பிறகே பதிலளித்தனர்.

“ஹலோ…மூர்த்தியா…?”

“இல்ல சார்…அவரோட அப்பா ..சொல்லுங்க…”

“மணி எட்டாகுது  அவனோட  பிரண்ஸ்  எல்லாம் வந்துட்டாங்க…ஆனா மூர்த்தி மட்டும் மிஸ்ஸிங்….”

“சாரி..சார்..மூர்த்தி இண்டர்வியுக்கு வரமுடியாது….”

“ஏன் உடம்பு செரியில்லையா சார்…?”.

“இல்ல…சார்.அவன போலிஸ் அரஸ்ட்  பண்ணிட்டாங்க…..”

“என்ன சொல்றீங்கே….அவன் அப்படி பட்டவன் இல்லயே….எதனாலே….?”

“நேத்து இராத்திரி  அவனோட  குளோஸ்  பிரண்டோட பிறந்தநாள கொண்டாட்டத்திற்காகப் போனவன்.ஏதோ விபச்சார விடுதிலே இருந்ததால போலிஸ்காரனுங்க புடிச்சிட்டானுங்க”

“ஒ..மை….காட்…”(சேய்… இவன நம்பி கூட் ரிப்போர் குடித்துடேனே……. போச்சு…கேவலமாப் பேசப்போரான் முதலாளி)

“சாரி சார் உங்களுக்குப் பெரிய சிரமத்தக் கொடுத்திட்டேன்”

“நோ…நோ…முத உண்மை என்னனு பாத்துட்டு வாங்க…என்னக்கு என்னமோ அவன் இப்படி செய்யறவர் இல்லை.”

“சாரி சார் இனி அவன் என் பிள்ள இல்ல”

“சார்…!”

“……………….”

மேனேஜர் முத்துவுக்கு முகம் வியர்த்து விட்டது.சற்றும் எதிர்பாராததை எண்ணி.

“ஒ…ஜீசெஸ்….என்ன இது…..? எப்போதான் திருந்துவாங்க இந்த டீனேஞ்ஜர்ஸ்…பாக்க என்னமோ படிச்சவனுங்க மாதிரி இருக்காங்கானுங்க….பட்…. இவனுங்கள பாக்குறதுக்கு  இங்க உள்ளவுங்க மாதிரியே இல்லையே….என்ன பண்றது?  கருப்பா இருந்தாலே இண்டியன்ஸ்னு சொல்றானுங்கள …..பாவம் பரிதாபம இருக்கெனு வேல போட்டு கொடுத்தா..இங்கவந்தும்  திருந்தரானுங்ளா! …. முதல்ல  இத ஸ்தாப் பண்ணனும் ….. இங்கவுள்ள நம்ம பையன்களுக்கு வேலத்தரனும்….இத பத்தி சங்கத்துல பேசனும்……..தொலைக்காட்சிப் பெட்டியை ஆவ் செய்தார் முதலாளி ஜேம்ஸ் லட்சுமணன்.

கோப்பையில் இருந்த பச்சைத்தேநீரை பருகியவாறு இருக்கையில் சாய்கிறார்.இடது கையால் மேசையில் மேலிருந்த பெல்லை தட்டுகிறார்.

மேனேஜர் முத்துவின் கால்கள்  முதலாளியின் அறைக்குச் செல்கின்றன!

                                           முற்றும்

0

மகாலட்சுமி சுவாமிநாதன்

மகாலட்சுமி சுவாமிநாதன்

            அரு.நலவேந்தன்

   

                                                நான் 1

 

        நீண்ட மனத்தேடலுக்குப் பின்  இமைகளை அசைத்தேன்.இருண்ட தேசத்தில் புலம்படாத  பிம்பங்கள் தோன்றி மறைந்தன.கண்களை மெல்ல திறந்தேன்.வெள்ளை பிரகாசம் கன்னத்தை  அறைந்து,கருவிழி ஆங்காங்கே சிதறியது.இடத்தை புரிந்து கொள்ளவில்லை அசுரத்தனமான வலி முகப்பகுதியிலிருந்து வருவாதாகப் பிரக்ஞை உறுத்தியது.கைகளை இருக்கிக்கொண்டேன்.கால்களை  மேல் நோக்கி இழுத்தேன். வாய்  திறந்து கத்தமுடியவில்லை. கண்களை இருக்கி மூடிக்கொண்டேன்.மூக்கினால் முக்கினேன்.பக்கத்தில் ஓர் உருவம் தோன்றி பிரசங்கித்தது.வெள்ளைச் சீருடை. ஊசியால் குத்துகிற  வலி. விழிகளின் வாசல் மூடின.

   *                   *                    *

                   அவள் 3

அவள் தோற்றுவிட்டாள்.அவள் முயற்சி கானல் நீராகியது..யாரும் அவளின்குரலை கேட்கவில்லை இந்த நிர்த்தாட்சண்ய உலகத்தில்.இறுதியாக பிரமாஸ்தரம் பிரதிவாதத்துக்கும் பயனானது.அசௌகரியத்துடன் தெருவில் பயணம்.சமுதாயத்திலும்  இளைய திலகங்களும் வெறுமென,அவளின் அங்க அசைவுகள்.கோயில் தெருவில் மணியோசை எதையோ போதித்தது.இறைவனின் நல்லாசி வழங்குவதாக மனதில் பிரதிஷ்டைசெய்தது.அவனின் நெஞ்சாங்கூட்டில் முகம் புதைக்க வேண்டும் என்றது மனம்.கண்களின் ஈரக்கலனை சேலை முந்தானையில் சேமித்த நிமிடம்.

          செல்பேசியின் சினுங்கள் , கங்கா அக்காவின் பெயரை பார்த்து கண்ணில் கலனின் வருகை அதிகரிக்க பேச்சை ஆரம்பித்தாள்.அக்கா சொன்னதை  தாரகமாய்க் கொண்டு,நடையை மெதுவாக ஒரு  மூத்திர சந்துக்கிடையில் நடந்ததால் மூக்கைச்சிந்தி சுவற்றில் தேய்த்துக்கொண்டே. அந்தச் சந்துக்கு இவளது தொடர்பு அதிகம்.இவள் வீட்டில் இருந்த நிமிடங்கள் சந்துகளில் வாசமித்த நிமிடங்கள் மிகையானதே.அவன் உறவும் இதுபோல ஒரு சந்துலிருந்து ஆரமித்ததுதான்.

          நிலவு மெல்ல அவளின் புற அழகை வர்ணித்திருந்தது.சத்தம் முடிந்து சாலை விளக்கு மெல்ல எரியும் தெருவில் பயணித்தால் ஒரு இன்ப நுகர்வோடு.எங்கும் இளங்கொசுகளின் கண்களில் கிளர்ச்சி பிணைந்த காமவிழிகள்.இவளைக் கற்பழிப்பு நடைவடிக்கை  பிரதிமையுடன்.கூட்ட  நெரிசலில் முட்டி மோதும் நிர்பந்தத்தில் அவளின் அருகில் ஸ்பரிசித்துக் கொண்டியிருந்தன இளசுகள்.என்றும் இல்லாத முகமூடியை மாட்டிருப்பதால் பல பெண் இன்பர்களுக்கு இவளின் மனதை புரிதல் இன்றி வினவினர் பதில் மௌனமாகிருந்தது.

         சேற்றுக்கரையைப் படிந்த விடுதியின் வாசல் படிக்கட்டில் .முகத்தில் அறை விடும் மல்லிகைச் செண்டு வாசம்.வர்ணஜாலங்களாய்த் தோழிகளின் உடல் அலங்காரம்.ஆண்களின் படையெடுப்பில்லாதக் கங்கா அக்காவின் பிரத்தியேக மாடி.வேகம் நடையில் பற்றிக்கொண்டது. “சாத்தானின் வாழும் இடமான இந்த உலகில் கடவுள் எங்குமேஇல்லை மனிதர்களிடமும்தான்.ஆலயங்கள் வெறும் கூத்தடிக்கும் சமுதாயினர்களுக்குக் கொட்டகை.பெண்கள் அங்கே வெறும் காமக்களியாட்ட பொம்மைகள்.விழிகளாலே பெண்களைக் கற்பழிக்கிறார்கள்.அங்கங்கள் இறைவன் எல்லா உயிர்வாசிகளுக்கும் படைத்தியிருக்கிறார்.அதென்னஆண்கள் பலரது கண்கள் பெண்களின் மர்ம உருபுகளை இச்சையின்பத்துடன் நோக்குவது பெரும்பாலும் நம்மவர்கள் இதில் மறுக்க முடியாத ஏற்றம்.அறையின் கதவுகள் திறந்திரப்பதனால் அக்காவின் எழுச்சி கலந்துரையாடலின் கருத்துகள் வெடித்து சிதறிக்கொண்டு இருந்தன.

       அக்காவின் நெருங்கிய தோழிகள் அங்கே அடைக்கலம்.அவளின் குமுறலுக்கு ஆறுதலை நீராக வார்த்து கொண்டியிருந்தால்.அவளின் முகம் சற்று தெளிவுற்றியிருந்தது.அக்கா ஆயுத்தமானால் நானும் முகம் கழுவிக் கொண்டு.வாகனம் ஓட்டுவது அக்காவுக்குப் பிடிக்காது.பயணிப்பதும் தான்.முடிந்தளவு கால்களே சக்கரமாகிக் கொள்வாள்.ஆண்களின் மேல் நம்பிக்கை இல்லை.ஆனால்,பரிவுகாட்டுவார் ஆண் பிச்சைக்காரர்களுக்கு மட்டும்.தேடி வந்து உதவிக்கேட்பவர்க்கு இவள் தெய்வம்.அக்காவின் புகழ் சில சமுதாயச் சுடர்களுக்கு மட்மே  விதிவிலக்கு.ஓட்டுனர் ஒரு பெண்.வாகனம் சாலையில் சற்று பொறுமை இழக்கவும் அக்காவின் சொற்களும் ஆவேசமாய்.

*                       *                        *                                                               

                                                   அவள்  2

         இன்றோடு நம் காதல் இறந்து விட்டது.வெண்பனிக்காலங்களில் அவனோடு வாசமித்த காலங்கள்,அவனின் மௌனமான கண்கள்,தாரகமாய் அவன் பெயரின் தியானம்,விழிகளின் உரையாடல்,உதடுகளின் கட்டிப்பிடிப்பு, உடையளங்காரம்,உள்ளலங்காரம்,நிர்வாணக்குளியளில் சவுக்கார நுரையில் அங்கங்களில் அவன்பெயரின் பச்சைக்குத்தல்,திரையரங்கு கிளர்ச்சிகள்,புகைப்பட வேட்கைகள்,துணிந்து கட்டிய தாலி,காலையில் விடுதியில் நடந்த முதலிரவு,அம்மாவிடம் கிடைத்த மஞ்சள் அழியாத மாங்கல்யம்.,அப்பாவின் விஷ்வரூபம்,எனது ஆவேச அபிநயம்,அம்மாவின் தற்கொலை முயற்சி,கண்ணீராய் உறைந்த நிமிடம்,உன்னுடன் சண்டை,நீயும்  என் தந்தையும் நடுரோட்டில்  நடத்திய  அவதார தாண்டம்,இருவரின் கால்களை இழுத்துப்பிடித்து கெஞ்சிய வினாடி,அப்பாவிடம் அறை உன்னிடம் அசுத்த வசனம் ,அனைத்தையும் கடந்து,இன்றும் இறைவனின் மேலிருந்த நம்பிக்கை மெல்ல கருக்கிக் கொண்டும்.உன் அழகிய முகத்தை இழிசெய்தது விபத்து என்ற போர்வைக்குள் நடந்த கொலைச்சம்பவம்.

        இறைவனிடம் கெஞ்சுகிறேன் என்னை அழித்துவிடுமாறு.காரணம் எப்படி  சொல்வேன்  தந்தையின் மிரட்டலுக்காக உன்னை பயன்படுத்தி நம்மை கூறுபோட்ட சதிச்செயலை.இதில்இருக்கும் மாங்கல்யத்தை உனது மனைவிக்கு வேலியாகட்டும் இது எனது வேண்டுகோள்,இந்த கடிதத்தை நீ படித்து முடிக்கும் முன் நான் உன்னை வந்து சேர்ந்திருப்பேன் உன் சுவாசக்காற்றாக மாறியிருப்பேன்.

      “அவரை தொந்தரவு செய்யாதீர்கள்” உலகில் எல்லா மருத்துவர்களின்  மறைக்க முடியாத வசனம்.அதை என்னிடம் சொன்னபோது மனம் ரணமாகியிருந்தது.மூன்று நாட்களுக்குப் பின் இப்பொழுது தான்  உனது சரிரத்தை பார்க்கிறேன்.பரவாயில்லை  என் தந்தையின்  துரோகச்செயலுக்கும் அவரின் ஈனகுலத்தில் பிறந்தமைக்கும்  இறைவன் நல்கிய பரிசாகக் கருதுகிறேன்.ஒரு தாதியினரிம் நான் எழுதிய கடிதத்தை அவரது மெத்தையின் கீழ்வைத்து விடுமாறு கெஞ்சினேன்.அவள் மறுத்து இசைந்தால்.மருத்துவமனையின் வாசலில் நின்ற போது மனம் வெம்பியது.வானம் மெல்ல கருக்க ஆரமித்தது.சில்லென்ற காற்று பாவடையின் கீழிகுக்கும் கால்களின் ரோமங்கள் நர்தனம்.துக்கம் கண்களை மறைத்ததும் மெல்லிய சுகங்களை மனம் மறந்து துயரத்துடன் வாகனத்தில் ஏறினேன்.அப்பா என்னைப்பார்க்கவில்லை நானும்.

        என்னுடைய கைநாடியை இருக்கியும் மருந்தின் செயல் சற்று வேகமாக வேண்டும் என்று இறைவனை வேண்டினேன்.வாகனத்தின்  எதிர்பாராத நிறுத்தம், முன் வந்த காரின்  வேகம்.தவறு அவருடைய கவனக்குறைவு இல்லை  ஆனால்,அப்பா திட்டினார் ஓட்டுனரை.அவருக்குப் பழக்கமானதால் ,காரை இடதுப்பக்கம் வளைத்து செல்லும் கணம், ஒரு  அக்கினிப் பார்வை எதிர்வாகனத்தின் மேல் சிதறியதை நான் கண்டேன். 

                     

                                                  அவள்  3                                               

         நுழையும் கணமே அக்கா எதிர் வாகனத்தை அக்கினிப்புஷ்பங்களால்  அர்ச்சனை செய்தால்.வாகனம் நின்றதும் கதவை லாவகமாகத் திறந்து ரிசப்சனுக்கு கால்கள் ஓடின.அவளா அல்லது அவசரமா புலம் படாதக் கவர்ச்சி உடலில் பரவியது.அவசர சிகிச்சைப் பிரிவில் முதலாம் நம்பர் படுக்கை.உள்ளே செல்ல அனுமதி இல்லாதனால்,கதவின் வட்ட கண்ணாடியில் பார்த்து ,முகத்தில் சுற்றப்பட்ட வெள்ளை துனி கட்டு மிகவும் துயரத்தை அள்ளி தெரித்தது மனப்பூங்காவில்.ஆயிரம் முறை விழிகளால் கண்டு இரசித்து,உதடுகளால் முத்திரை பதித்த சிவந்த கண்ணங்கள் அதற்கு இந்த நிலை.வாரம் தவறாது எங்களின் சந்திப்பு. இன்பப் புணர்வில் சேமித்த அந்த அன்பு வேறு எந்த ஆணுக்கும் வரப்போவதில்லை.

         இறைவன் இருக்கிறார் என்ற கூற்றை மறுக்கமுடியவில்லை இந்த கணம்.அக்காவின் பிடி தளர கதவருகே வேகம் கொள்ள தாதியினரின் வேண்டுகோளுக்காக  மனரீதியில் பிரேதமாய் மண்டியிட்டேன்.திடீர் மருத்துவர்  வருகை பல்வேறு கேள்வி பதிலுக்காக அருகில் செல்ல ,அவர் மறுக்க மனம் மேலும் வெம்பித் தல்லாடி தவிக்க,அவரை ஒரு மாதங்களுக்குப் பக்கத்தில் இருந்த பேணிக்காகும் பொறுப்பை பல கெஞ்சலுடன் பெற்ற தருணம் பெரும் சந்தோஷத்தில் மூழ்கியது மனம்.ஒருமணி நேர தடங்களுக்கு பின் என் கைகள் அவரின் கால்களைப் பற்றி தேம்பியது.மாலையில் ஆலயம் செல்லும் பணி தினக்கடணில் சேர்ந்துக்கொண்டது.சோதிடர்கள் இல்லம்,யோகிகளை மிஞ்சும் விரதம்,108 தேங்கய் பலி,ஆடுகளுக்கு சூரசம்ஹாரம் மேலும் மேலும் பக்தியின் உச்ச வேண்டுதல் என்றும் பேசாத இறைவனுக்கு.

 

 

                                                     நான் 1

 

       முகத்தில் சுதந்திரக் காற்று வீசத் தொடங்கியது.மருத்துவரின்  கைகள் முகத்தில் உள்ள இடுக்கைகளைத் தகர்த்துக் கொண்டு இருந்தார்.இன்று என் மனைவி வருவாள்  மனக்கதவில் ஊசலாடிக்கொண்டிருந்த கேள்வி.எதிர்ப்பார்த்தது இவளது வருகை.மனம் மறுத்தது. “அவுங்க ஒரு நாள் கூட உங்கள பாக்க வரலயே ஏன் ?” இவள் சொல் பொய்யானதா மெய்யானதா இருக்கலாம் மனதின் குரல்.அசைக்க முடியாத நம்பிக்கை தினமும் கரையத் தொடங்கியது அதவனின் உறக்கம் கண்ணில் கணம்.மெல்லிய மஞ்சள் வாசனை,சிவப்பு சந்தன ஜரிகைப்பட்டு ,மல்லிகை தொங்கும் சடை,நெற்றிப் பட்டை மத்தியில் குங்குமம் அவளின் சரிதம் சாந்தப்படுத்தியது.

       கால்களைத் தொட்டு கண்களில் ஒற்றல்,கையில் பிரசாதம்,வலது கை  மோதிர விரலால் ஏதோ ஒரு தெய்வத்தின் மந்திரமோ அல்லது பெயரையோ சொன்னவரு மிகவும் பக்தியுடன் பூசினால்.ஆச்சர்யம் வசனமாய் வர அவள்  புன்னகைத்தால்.நடப்பது பிரமையின் விளையாட்டாக இருக்கலாம்.நம்பிக்கை கரையும் பணி நடந்தது.அகலத் தகடு தட்டு,நீறுத்தி அளவித்த புளுங்கள் சாதம்,அவித்த எண்ணை ஒழுகும் கோழி இறைச்சி,வெந்துப்போனக் காய்கறிப் பிரட்டல்,குளிர் அமர்ந்த குமட்டிப்பழத் துண்டு மத்தியான உணவாக வரவழைக்கப்பட்டது.

       சுற்றும் இதே சத்தான உணவு பல்லிழுத்துக்கொண்டு  இருந்தது.அரை மணி நிமிடங்கள் பின்,தட்டு சந்தமானவருக்குச் சென்றது.பெரும்பாலும் தட்டுகள் காலியாகவும் சிறுபாகம் சாதத்தின் வெளிக் கிடந்தது.பக்கத்தில் பார்வைத்தேன் அரை நூண்றாண்டு கடந்த தேகம் சான்றாக வறட்சியான பிரதேசம் முகம்.முளங்கைகளில் தோல் சுருக்கம் அசுவாசமாயிருந்தது.இடது கால் கட்டுப்போடப்பட்டது.அவள் பேச ஆரமித்தால்.கனவுலகக் கதைகள் அவளின் விருப்பமான படைப்பு.ஏதோ ஒரு ஆங்கில கனவுலகக் கதையை மெய்மறந்து சொல்லிக் கொண்டிருந்தால் நான் ஐக்கியமாகவில்லை.

       அவளின் அங்க அசைவு களையும் முக உணர்ச்சிகளையும் வெருட்டிருந்தேன்.அன்றைய பொழுது போனது புலம்படாத உண்மை.காலைக்கடன் படுக்கையிலே சென்றுயிருந்தது.அவளுக்குச் சிரமத்தைக் கொடுத்துவிட்ட வெட்கம் சூழ்ந்திருந்தது.அவள் புன்னகைத்துக் கொண்டே சுத்தம் செய்தால்.இன்றும் இவள் வருகை எனக்கு இனம்புரியாத  உணர்ச்சி உடலில் உய்த்திருந்தது.மதிய நேரம், தைரியத்தோடு  கேட்டேன்.சிரித்தக்கண்கள் குளமாகின.வீட்டில் நடந்த அரகேற்றம் உச்சமுடிவாக வெளியேற்றமும் இனி என்னோடுதான் என்கிற முடிவு அதிரவைத்தது.

        அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டே கழிவறைப்பக்கம் சென்றுயிருந்தால்.மனைவியின் சொல்லைக் கேட்க மறத்த நிமிடங்கள் பெரும்பாலும் இவளின் மடியில் அடைக்கலமாகும்.காரணம் அறியாதது இவளது காதல்.இரவுப்புணர்ச்சியில் தொடங்கிய உறவு இன்று எனக்கு துணையான அவதாரம்.வேலியாக்கிய மனைவி என்னை மறந்துவிட்டாளோ  விடை அறியா மனம் தவித்தது.தொண்டை அரித்தது,மெல்ல காய்வதாக பிரமை,வலதுப் பக்கத்தில் கட்டிலில் கிழிருந்த  தண்ணீர்ப்புட்டியை சில மூச்சிகளுக்கும் பின்,முதல் மடக்கு செறிவுண்டு  காய்ந்த உதட்டில் நீர்படிந்ததும் கீழுதடு லேசாக எரிந்தது.முக்கால்வாசியும் தீர்ந்துக் கிடந்தது.அவள் இன்னும் வரவில்லை.உதவித்தேவைப்பட்டது.கண்கள் சொருகின.தலையணையை மெல்ல நகர்த்தித் தோதாகப்போடவேண்டும்.கண்களில் வேட்டைக்குப் பின்,நானே இறங்கினேன்.

        இரு கரங்களில் முடியாதனால் வலதுக்கையாலே தலையணையை எடுத்தேன்.பளிச்சென வெள்ளைக் காகித மடிப்பு.திருநீரு பையாக இருக்குமோ என எடுத்துப்பார்தேன்.முனையைப் பிடித்ததனால் சட்டென விழுந்து நெஞ்சை  உளுக்கியது மனைவியின் மாங்கல்யம் அவளது கைப்படிந்த மடல் ஒரு முழுங்களுக்குப் பின் வாசித்தேன்.

  

                                                  அவள் 3

          முகத்தை குளிர் நீரால் அலம்பினேன்.வானம் மெல்ல நனைந்து நெறிகட்டிய மேகக்கூட்டம்சிதறிய  தூவானம்.சாயங்காலத்தின் வாகன நெரிசல்.காக்கை கூட்ட சங்கமம் அடங்கிய நிசப்த தரிசனம்.ஆதவனின் அஸ்தமனம் ஒரு நெருடலை உடலில் பரவியது.அவரின் முகத்தை தரிசிக்கும் தருணத்தை எண்ணிய கணம்.சில்லென்ற தென்றல் முகத்தை வருடியது.கைகளைக் கழுவிவிட்டு சேலை முந்தானையில் துடைத்தேன்.நாளையுடன் வீட்டிற்குத் திரும்பிவிடும் சந்தோஷம் நிகழ்காலத்தின் செயல்பாடுகளால் மனம் மறக்கும் நிர்பந்தம்.கழிவரையின் வாசல் முடிந்து அவரின் இருப்பிடத்துக்குச் செல்கிற தருணத்தில்

          மிகவும் அமைதியான சலனத்தின் உருவமாய் அறை,கோப்புகளின் அமைதியற்ற நிர்மாணம்,செதுக்கிய சிற்பமாக அமர்ந்திருந்தவர் எழுந்துக்கொண்டார் எனது சரிதத்தின் நிழல்.அவர் சொல்லுக்கு மனம் பொறுமை கொண்டு ,கண்களில் துளிகள் படர்ந்தன.முகம் வேர்த்தது.சேலை முந்தானையில் அழுத்தத் துடைத்தேன்.அவரின் அழகிய முகம் சிதைந்தது விதியின் எழுத்து மறைவிற்கான தருணத்தை மனம் ஏங்கியது.இயற்கை கைவிரித்தது செயற்கை விஷ்வரூபம் எடுத்தால் பயன் உண்டு என்றார் மருத்துவர்,அவரின் தொனியில்  தென்பட்டது ஆதாயத்திற்க்கான முய்ற்சி.உதடுகள் துடித்தன,நாக்கு மறுக்கவில்லை,ஒத்துக்கொண்டேன்அவரின் வார்த்தைக்கு அப்பொழுது எங்கேயோ நம்பிக்கைச்சுடர் உருவாகிய பிரமையில்  ஆழ்மனம்.கைகளைப் பிசைந்தேன்,கண்கள் சுவரில் மாற்றப்பட்ட காலண்டரில்.

       வாழ்நாள் முழுவதும் முந்தை விரித்தாலும் வராதத் தொகையை எப்படி புரட்டப்போகிறேன் என மன கருத்து.பிரக்ஞை திரும்ப முன் இருந்த டாக்டர் என் அருகில் நின்றார்.ஏதோ ஒரு அசௌகரியத் தன்மை உணர்ந்தேன் காரணம் தெரிந்து படபடத்தது மனவாசல்.டாக்டரின் கைகள் என்னை கூசச்செய்து ,கையை தட்டி விட்டு முகத்தைப்பார்த்தேன்.பரிவாகஇருக்க வேண்டிய விழிகள் பரிசுத்தம் இழந்து பரிகாசத் தன்மை.பிரத்தியோக  அவரின் கட்டளைகள் இன்றையப்பரிதியின் சாவுக்குப் பின் நடத்தவேண்டும்.கோபப்படமுடியவில்லை,என் மீதான கோபத்தால் அவருக்கு விளைவுகள் கிடைத்துவிடும் என  அஞ்சி அமைதியானேன்.

       அவரின் கண்கள் என்னை  இரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.காற்றாடியின் வீச்சில் சேலை மடிப்பு மெல்ல விலக அவருக்கு இன்பமானது.அறையை விட்டு வெளியே சென்று அக்காவைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்ல பணம் அந்திசாய்வதற்குள் வந்துசேர்ந்தது.ஒரு வெள்ளை பிளாஸ்டிக் பையில்.நோட்டுகளை எண்ண நேரம் இல்லாததால் நேராக கவுண்டரில் கொண்டு போட்டேன். எண்ணிச் சரிச்செய்துக் கொண்டு விவரங்கள் கேட்பதற்காக எனது கண்களை நோக்கினாள்.பெயரைச் சொல்லியும் அடையாளக்கார்ட்டைக் கேட்டால். தயக்கத்துடம் எடுத்து தந்தேன்.

“உங்க பேரு என்ன மேடம் ?”ஆங்கிலத்தில் கேட்டாள்.

“மகாலட்சுமி சுவாமிநாதன்”

“இந்த  அடையாளக்கார்டு உங்களோட இல்லயே யாரோ மனோகரன்  சுவாமிநாதனுப் போட்டிருக்கு” ஆங்கிலத்திலே கேட்டாள்.

“இல்ல  அது என்னோடுதான்”.நானும் ஆங்கிலத்தில்.

 

 

                                                முடிவு